வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தில் ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் பங்கேற்பு!

Thursday, March 2nd, 2017

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்  தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கக் கோரி கடந்த 27 ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த நியாயமான போராட்டத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது ஆதரவை வழங்கியுள்ளது.

யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக, கடந்த-2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கற்று வெளியேறிய சகல பட்டதாரிகளுக்கும் பொருத்தமான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உயர்மட்ட முக்கியஸ்தர்களான கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்தின், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்  ஆகியோர் குறித்த  போராட்டத்தில் இணைந்துகொண்டதுடன் அவர்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டனர்

இதனிடையே வேலையற்ற பட்டதாரிகளுடன் தொலைபேசியூடாக உரையாடிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா போராட்டத்திலீடுபட்டுள்ள பட்டதாரிகளது பிரச்சினைகள் தொடர்பில் உரிய தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கான   முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பட்டதாரிகளுக்கு வீதியிலேயே சமைத்து, வீதியிலேயே உண்டு, வீதியிலேயே உறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1

  002

003

004

3

 6

2

Related posts: