வேலணை வங்களாவடியில் பொதுச்சந்தை வேண்டும் -விவசாயிகள் கோரிக்கை!

Sunday, May 13th, 2018

வேலணை வங்களாவடியில் உழவர் சந்தை அமைக்கப்பட வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் வேலணை பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் வங்களாவடி சந்தியில் சந்தையெதுவும் இல்லை, இதனால் உற்பத்தி செய்யப்பட்ட விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உழவர்சந்தை அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இடைத்தரகு வியாபாரிகளின் தலையீடு இன்றி விற்பனை செய்ய முடியும். எனவே வங்களாவடியில் உழவர் சந்தையினை நிறுவுவதற்கு வேலணைப் பிரதேச சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகின்றோம். என்றுள்ளது.

Related posts: