வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல – நிதி ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

Monday, August 12th, 2024

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல எனவும் அதற்காக நிதி ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

யட்டியந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவின மதிப்பீடு 100 கோடி ரூபாயை தாண்டவில்லை எனவும் 10 பில்லியன் தான் வரம்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்குப் பிறகு இன்னும் பணம் மீதம் உள்ளது. அச்சிடுதல், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளைத் தவிர, அதிகாரிகளின் கொடுப்பனவுகள் போன்ற சில செலவுகள் உள்ளன என்று அமைச்சர் கூறினார்.

தேர்தலுக்கான நிதி குறித்து நிதி அமைச்சகம் எந்த சந்தேகமும் கொள்ளக்கூடாது, ஏனெனில் செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பணம் வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: