வெளிநாட்டு வேலைவாய்ப்புதுறை விரைவில் டிஜிற்றல் மயப்படுத்தப்படும் – அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவிப்பு!
Monday, February 13th, 2023வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை விரைவில் எண்மான (Digital) மயப்படுத்தப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஓமானுக்கு சென்றுள்ள அமைச்சர் மனுஷ நாணயக்கார அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை எண்மான மயப்படுத்துமாறு ஓமான் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், எண்மான மயமாக்குவதற்கான பணிகள் விரைந்து முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குப்பைகளை வீதிகளில் தீயிட்டால் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் தெரிவிப்பு!
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60 ஆக உயர்வு - சட்டமூலத்தில் கைச்சாத்திட்டார் சபாநாயகர்!
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை இலங்கை விஜயம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு!
|
|