வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 26 ஆயிரத்து 506 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கடந்த 07 ஆம் திகதி வரை வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 51 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 25 சதவீதமானவர்கள் ரஷ்யர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு சீன அரச நிறுவனத்துக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு - கல்வி அமைச்...
எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது - அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி!
16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறை கைதிகள் தொடர்பில் அரசாங்கம் அதிரடித் தீர்மானம்!
|
|