வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!
Sunday, February 11th, 2024
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.
அதற்கமைய, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.4 சதவீத அதிகரிப்பு என அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் குடும்பத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதி உதவி!
உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து - ஐ.நா. புள்ளிவிபர ஆய்வில் தகவல்!
இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்ள சீன மக்களும் சீன அரசாங்கமும் துணை நிற்கும் - இலங்கைக்கான ச...
|
|
|
இந்திய மாறுபாடான டெல்டா திரிபு வரும் மாதங்களில் உலகில் ஆதிக்கம் செலுத்தும் - உலக மக்களுக்கு உலக சுகா...
பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து ஆராயப்படுகிறது - விரைவில் தீர்வு காணப்படும் என...
வங்காள விரிகுடாவில் வலுவடைகிறது தாழமுக்கம் - அடுத்த 12 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடையக் கூடி...


