வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுகின்றன – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் !

Monday, March 30th, 2020

மார்ச் மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வருகை தந்த அனைவரும் தனிப்பட்ட தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அறிவுரையை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனிமைப்படுத்தல் சட்டமூலத்திற்கு இணங்க, இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: