வெளிநாடுகளிலிருந்து வருவோரின் தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மாற்றம்!
Wednesday, December 16th, 2020வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருவோரின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்பாக சுகாதார அமைச்சினால் 06 விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக அறிவிக்கப்பட்டுள்ள 06 விடயங்களை பின்பற்றி உரிய வகையில் இவர்கள் தமது வீடுகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு சுகாதார அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
உள்ளூராட்சிகளின் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணையின் கால எல்லை மேலும் நீடிப்பு!
எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு!
நாட்டில் கொரோனா அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் ...
|
|