வெளிநாடுகளிலிருந்து வருவோரின் தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மாற்றம்!

Wednesday, December 16th, 2020

வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருவோரின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்பாக சுகாதார அமைச்சினால் 06 விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக அறிவிக்கப்பட்டுள்ள 06 விடயங்களை பின்பற்றி உரிய வகையில் இவர்கள் தமது வீடுகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு சுகாதார அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts: