வெப்பநிலை அதிகமாக காணப்படும் பாடசாலைகளின் நேர அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது – கல்வி அமைச்சு
Wednesday, May 4th, 2016
வெப்பநிலை அதிகமாக காணப்படும் பாடசாலைகளின் நேர அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பநிலை, பாடசாலை மாணவர்களுக்கு எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக கல்வி அமைச்சரினால் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரைகள் வளிமண்டலவியல் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
நாட்டில் குளிரான காலநிலை தொடரும்!
கூட்டமைப்பின் ஆட்சியில் யாழ் பஸ் நிலைய கழிவறைகள் நாற்றமெடுக்கின்றது -தயாசிறி தெரிவிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கரு - டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்தும் வேலைத்தி...
|
|
|


