வீரமாநகர் மக்கள் எதிர்கொண்டுவந்த சிறுநீரக நோய் பிரச்சினைக்கு திருமலை மாவட்ட ஈ.பி.டி.பியின் இளைஞர் அணியினரது முயற்சியால் தீர்வு!

Sunday, May 6th, 2018

திருகோணமலை வீரமாநகர் மக்கள் எதிர்கொண்டுவந்த சிறுநீரக நோய் பாதிப்புகளுக்கு திருமலை மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணியினரது முயற்சியால் மருத்துவ உதவி வழங்கலுக்கான தீர்வுகள் காணப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக தூய குடிநீரின்மை காரணமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுவந்த குறித்தபகுதி மக்கள் தமக்கான தூய குடிநீருக்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணியினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த பகுதி மக்களது பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குணா தலைமையிலான இளைஞர் அணியினர் திருமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவல் அவர்களது  பங்களிப்புடன் குறித்த பகுதி மக்கள் எதிர்கொண்டுவந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக அப்பகுதியிலுள்ள 21 இடங்களில் குழாய் வழியாக குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் தூய குடிநிரின்மையால் சிறுநீரக நோயினால் பாதிக்பப்பட்ட வீரமாநகர் பிரதேச மக்களுக்கு தொடர்ச்சியான மருத்துவ உதவியும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: