வீதி விபத்துகள் – போக்குவரத்து குற்றங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க புதிய செயலி அறிமுகம்!
Monday, May 17th, 2021இன்றுடன் ஆரம்பமாகும், உலக வீதி விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தகவல் பெறும் வகையிலான கைப்பேசி செயலியொன்றை (Mobile App) பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையில், அவ்வமைச்சில் இன்று இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ‘ஈ – ட்ரெஃபிக் பொலிஸ் ஸ்ரீலங்கா’ (e-Traffic Police Sri Lanka) என்ற இந்த செயலியின் ஊடாக, பொதுமக்கள் எவ்வித கட்டணமும் இன்றி, போக்குவரத்து குற்றங்கள் மற்றும் வீதி விபத்துகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிப்பதற்கு வசதியளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா : இலங்கையின் கணக்கு 148 ஆக உயர்வு!
கொரோனா வைரஸ் தாக்குவது எப்படி? – வெளியானது இலங்கை பேராசிரியர் கூறும் புதிய தகவல்!
தொடருந்து, பேருந்து சேவைகள் வழமைபோன்று முன்னெடுப்பு!
|
|