வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்துவைக்கப்படவுள்ள துரையப்பா விளை­யாட்டு அரங்கு!

Friday, June 10th, 2016

யாழ்ப்­பா­ணத்தில் புன­ர­மைக்­கப்­பட்­டுள்ள துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்­கத்தை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி எதிர்­வரும்18-ஆம் திகதி நேர­டி­கா­ணொளி ஊடாக (வீடியோ கான்­பரன்ஸ் திறந்து வைக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்­பா­ணத்தின் அடை­யா­ளங்­களில் ஒன்­றாக இருப்­பது துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கம் இந்த விளை­யாட்­ட­ரங்­கத்தை புன­ர­மைக்க இந்­தியா நிதி உதவி செய்­துள்­ளது.

கடந்த 2 ஆண்­டு­க­ளாக இவ்­வி­ளை­யாட்­ட­ரங்கம் புன­ர­மைக்­கப்­பட்டு வந்­தது. தற்­போது இந்த பணிகள் முடி­வ­டைந்து பயன்­பாட்­டுக்கு வர இருக்­கி­றது

இந்த விளை­யாட்­ட­ரங்கத் திறப்பு விழா எதிர்­வரும் 18ஆம்­தி­கதி நடை­பெற உள்­ளது

இந்­நி­கழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பங்­கேற்­கிறார். இதன்­போது பிர­தமர் மோடி இந்தியா­வி­லி­ருந்தே நேரடி காணொளி தொடர்­பாடல் முறை மூல­மாக ( வீடியோ கான்­பரன்ஸ் )பங்கேற்­கிறார். பிர­தமர் மோடியும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இணைந்து விளையாட்டரங்கத்தைத் திறந்து வைத்து உரை­யாற்ற உள்­ளனர்

இதே­வேளை துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கை திறந்து வைத்த பின்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் யாழ்ப்­பா­ணத்தில் இவ்­வ­ருடம் நடத்­தப்­ப­ட­வுள்ள தேசிய விளை­யாட்டு விழா தொடர்­பான கலந்­து­ரை­யாடல் இடம்­பெ­ற­வுள்­ளது இதில் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர உட்­பட பலரும் பங்கேற்கவுள்ளனர் . எதிர்வரும் செப்டெம்பர் மாதம் துரையப்பா விளையாட்டரங்கில் தேசிய விளையாட்டு விழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .

Related posts: