விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் முகாமைத்துவ உதவியாளர்கள்!
Wednesday, April 25th, 2018வடக்கு மாகாண விவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் செயல்திட்டத்துக்கு முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாகாண விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் விவசாய மயமாக்கல் என்னும் சிறப்பு வேலைத்திட்டம் உலக வங்கியின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது. இது விவசாயம் சார்ந்த உற்பத்திகள், பயிற்சி நெறிகள், அறுவடைகள் தொடர்பான பயன்தரக் கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வேலைத்திட்டமாகும்.
11 ஆயிரத்து 304 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது ஐந்து ஆண்டுகள் செயற்றிட்டமாக அமையும்.
இந்த செயல்திட்டத்தை சிறப்பாக மேற்கொள்ளுவதற்கு பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அலுவலகத்துக்கு முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் தேவை. அப்போதுதான் செயல்திட்டம் வினைத்திறனாக அமையும்.
ஆகவே இந்த உத்தியோகத்தர்களை செயல்திட்ட கால எல்லைக்கு ஏற்ப ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|