விளையாட்டை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவோம்! – ஜனாதிபதி

Monday, October 3rd, 2016

உலக மொழியான விளையாட்டை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் நிறைவு நிகழ்வில் நேற்று பங்குபற்றிய  உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமாதானம், சகோதரத்துவம், மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி மனங்களை சுகப்படுத்தும் உலக மொழியான விளையாட்டை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு பாடுபடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விளையாட்டு மைதானமென்பது, இன, மத, சாதி, மாகாண பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒன்றிணையக்கூடிய இடமாகுமென இங்கு குறிப்பிட்ட ஜனாதிபதி ஒழுக்கமற்ற சமூகத்தை ஒழுக்கமான சமூகமாக மாற்றும் விளையாட்டு மைதானம், தனிநபர்களிடம் ஒழுக்கத்தையும், பண்பையும் உருவாக்குவதாகவும் குறிப்பிட்டார்.

இன்று எமது நாட்டுக்கும், முழு உலகுக்கும் ஒழுக்க விழுமியங்கள் கட்டாயமான தேவையாக உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒழுக்க விழுமியங்கள் இல்லாததால் உலகில் யுத்தம் நடைபெறுவதாகவும் யுத்தம் இல்லாதொழிந்து சமாதானம் உருவாக வேண்டுமென்றால் முழு உலகிலும் ஒழுக்கநெறி பின்பற்றப்பட வேண்டுமெனவும் கூறினார்.

நற்பண்பும், ஒழுக்கமும் மிக்க சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக விளையாட்டுத்துறைக்கு  அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு தற்போதைய அரசு பாடுபடுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, முழு நாட்டிலும் ஒரேவகையான அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடியவாறு நாட்டின் அனைத்து மாகாணங்களிலுமுள்ள பிள்ளைகளின் விளையாட்டுத் திறமைகைளை உயாத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதாகவும் கூறினார்.

அதற்குத் தேவையான உயர் தரமுடைய விளையாட்டரங்குகள், நவீன தொழிநுட்பங்கள் உட்பட ஏனைய வசதிகளையும் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இம்முறை தேசிய விளையாட்டு விழாவுக்காக நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 800  வீர, வீராங்கனைகள் பங்குபற்றியதுடன் திறமைகளைக் வெளிக்காட்டியோருக்கு வெற்றிக்கேடயங்களும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.

my3

Related posts: