விரைவில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவார் – பிரதமர் தினேஸ் குணவர்த்தன அறிவிப்பு!

Friday, July 7th, 2023

புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் செயற்பாடு மிக விரைவில் நடைபெறும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டீ விக்ரமரத்ன தமது பதவியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, பொலிஸ் மா அதிபர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

இந்தவிடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

காவல்துறை மா அதிபர் ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதியால் அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சேவை நீடிப்புக் காலமும் நிறைவுக்கு வருவதால், புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தீர்மானிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கிறார்.

வெகுவிரைவில் அடுத்து வரும் மணித்தியாலங்களில் அந்தப் பணிகள் இடம்பெறும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: