விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவிப்பு!

Friday, May 29th, 2020

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்த பயணிகளை விமான நிலைய வளாகத்திற்குளேயே வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க குறித்த சோதனைக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்குமாறு சுகாதார அமைச்சர் துறைசார் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

முன்பதாக சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரனதுங்கவுடன் சுகாதார அமைச்சர் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான விசேட கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்ததை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் ஆகியோருக்கு கொரரானா வைரஸ் பரவுவதை தடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: