விபத்தில் பேரன் பலி! அதிர்ச்சியில் பாட்டி மரணம்!!

Thursday, July 21st, 2016

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் கோடமேட்டினை சேர்ந்த மகாலிங்கம் டினேஸ்குகன் (19 வயது) இன்று அதிகாலை விபத்தில் பலியாகியுள்ளார்.

சிறியரக கன்டர் வாகனத்தில் தாந்தமலை ஆலயத்திற்கு சென்றுவரும் போது மாங்காட்டில் மின்சாரக்கம்பத்துடன் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதனை கேள்வியுற்ற இளைஞனின் அப்பம்மா அதிர்ச்சியில் மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு சடலங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: