வித்தியா கொலை: குற்றவாளிகள் ஓரிடத்தில் இல்லை – துஷார உப்புல்தெனிய!

Saturday, September 30th, 2017

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு கைதிகளும் தும்பறை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டிருந்த ஏழு பேர் மீதும் சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய கூறுகையில்  இவ்வாறு வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது அவ்வாறு சிறைக் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு தாம் இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறினார்.

தும்பறை சிறைச்சாலையிலுள்ள குறித்த ஏழு கைதிகளும் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

Related posts:

விளையாட்டை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவோம்! - ஜனாதிபதி
மக்களின் தேவையறிந்தே செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுப...
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலைத் தொடங்க அமைச்சரவை அங்கீகாரம் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவ...