விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய!
Tuesday, October 8th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்தபின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு வேட்பு மனு தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களுக்குமான தேர்தல் விதிமுறைகளும் நிபந்தனைகளும் மஹிந்த தேசப்பிரியவால் வாசிக்கப்பட்டது.
அத்துடன் தேர்தல்கள் தொடர்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமானதுமானதுமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்புளுவன்சா தொற்று அதிகரிப்பு – 70ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஜனவரிமுதல் தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும்!
கடந்த ஆண்டை விட 16.5 வீதத்தால் தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
|
|
|


