விசேட முற்பணத்தை அரச அதிகாரிகளுக்கு வழங்க தீர்மானம் – பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!
Sunday, December 10th, 2023
எதிர்வரும் ஆண்டிற்கான விசேட முற்பணத்தை அரச அதிகாரிகளுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்பணமாக 4,000 ரூபாய் வழங்கப்பட உள்ளதுடன், ஜனவரி 1ஆம் திகதி முதல் பிப்ரவரி 29ஆம் திகதிக்குள் அவையனைத்தும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,ஒரு சுற்றறிக்கையை வெளியிடுவதன் மூலம், இந்த முன்பணத் தொகையை 2024ஆம் ஆண்டிற்குள் வசூலித்து முடிக்க வேண்டும் என்றும் அமைச்சு கூறுகிறது.
திறைசேரியின் உடன்படிக்கையின் பேரில், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தனியாரிடமிருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி!
காரைநகரில் காவல் நிலையம் ஒன்றை அமைக்க யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல் மா அதிபர் உத்தரவு !
பாடசாலை முதலாம் தவணை திங்களன்று ஆரம்பம் - தரம் ஒன்று மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளும் முன்னெடுப்பு ...
|
|
|
சனநெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா பரவலின் வேகமும் அதிகரிப்பு - பொது சுகாதார பரிசோதகர்கள் எச்...
மட்டக்களப்பில் சராசரியாக புதிய தொற்றாளர்களாக 300 பேருக்கு மேற்பட்டவர்கள் இனங்காணப்படுவதோடு ஐந்துக்கு...
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்...


