விசேட நாடா­ளு­மன்ற அமர்வு இன்று!

Wednesday, May 25th, 2016
நாடாளு­மன்­றத்தின் விசேட அமர்வு இன்று புதன்­கி­ழமை 1.00 மணிக்கு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் நடை­பெ­று­கி­றது.

நாட்டில் ஏற்­பட்ட மழை­ வெள் ளம், மண்­ச­ரிவு மற்றும் இதனால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலைமைகள் தொடர்­பா­கவே இன்­றைய விசேட பாரா­ளு­மன்ற அமர்வு இடம்­பெ­று­கி­றது.

கடந்த வாரம் பாரா­ளு­மன்ற அமர்வின் இறுதி தின­மான 20 ஆம் திகதி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்ன­ணியின் கொழும்பு மாவட்ட எம்.பியும் மஹிந்த அணி ஆத­ர­வா­ள­ரு­மான தினேஷ் குணவர்த்தன நாட்டில் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நிலை தொடர்­பாக விசேட ஒரு நாள் விவாதம் நடத்தப்­பட வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­க­விடம் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்­பாக கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தை கூட்டி அறி­விப்­ப­தாக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்தார்.

அதற்­க­மைய இன்று புதன்­கி­ழமை வெள்ள அனர்த்தம் மண்­ச­ரிவு தொடர்­பாக விசேட ஒரு நாள் பாராளு­மன்ற விவாதம் இடம்­பெ­று­கி­றது.

இதன்­போது நாடு முழு­வதும் பாதிக்­கப்­பட்டோர் எண்­ணிக்­கைகள் அவர்­க­ளுக்­கான நிவா­ர­ணங்கள், நிதிச் செல­வுகள் உட்­பட பல கேள்­வி­க­ளுக்கு அர­சாங்கம் பதி­ல­ளிக்க வேண்டும்.

அதற்­கா­கவே இன்­றைய விசேட விவாதம் என வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி தெரி­வித்தார்.

அதே­வேளை நாட்டில் ஏற்­பட்ட நிலை­மைகள் தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: