வாழ்வாதார உதவிகளை கோரும் திருநெல்வெலி பகுதி மக்கள்!

Saturday, January 28th, 2017

வாழ்வாதார உதவிகளைப் பெற்றுத்தருமாறு திருநெல்வேலி 9ஆம் வட்டாரம் பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்றையதினம் (27) திருநெல்வேலி 9ஆம் வட்டாரம் பகுதியில் மக்கள் குறைகேள்  நிகழ்வில் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடமே மேற்குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது

மேலும் வீட்டுத்திட்டம் மற்றும் சுகாதாரம் போன்ற பிரச்சினைகளால் தாம் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்க நாளாந்தம் முகம்கொடுத்து வருவதாகவும் இவற்றுக்கான தீர்வுகளை பெற்று தருமாறும் குறித்த பகுதி மக்கள்  அம்பலம் இரவிந்திரதாசனிடம் தெரிவித்தனர்.

மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த கோரிக்கைகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வுகளை பெற்றத்தர முயற்சிப்ப்பதாகவும் தெரிவித்தார்.

unnamed

Related posts: