வாள்வெட்டுத் தாக்குதல் – கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் 13 பேர் பலி – 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, February 12th, 2024

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வாள், வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்  என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: