வார இறுதியில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு – மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!
Saturday, March 26th, 2022வார இறுதியில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய A முதல் L வரையான வலயங்களில் இன்றைய தினம் 5 மணித்தியாலங்களுக்கு சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
மேற்படி வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது. அத்துடன் P முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணிமுதல் இரவு 11 மணிவரையில் 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எல்லை நிர்ணய அறிக்கை 17ஆம் திகதி அரச அச்சகத்திடம் ஒப்படைக்கப்படும்
சர்வதேச தொடர்பு மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது யாழ்ப்பாணம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச...
சகல பாடசாலைகளுக்கும் இன்றுமுதல் வழமைக்கு திரும்பியது - பிரச்சினைகள் எழுமாயின், வலய கல்விப் பணிப்பாளர...
|
|