வாக்கெடுப்பு நாளைவரை ஒத்திவைப்பு!

Monday, March 22nd, 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளைவரை (23)  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான வாக்கெடுப்பு  இன்று (22) நடைபெற இருந்தது.

வாக்கெடுப்பை ஒழுங்குப்படுத்துவது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த வாக்கெடுப்பு  பிற்போடப்பட்டதாக ஜெனிவா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: