வாக்குப் பெட்டிகளை கொள்ளையிட முயற்சித்தால் சுட்டு விடுங்கள்: பொலிஸாருக்கு மஹிந்த தேசப்பிரிய விசேட உத்தரவு!

Sunday, July 26th, 2020

வாக்குப் பெட்டிகளை கொள்ளையிட முயற்சிக்கும் எவரையும் சுடுங்களென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும்  கூறுகையில் – வாக்குப் பெட்டிகளை அத்துமீறி கொண்டு செல்ல வரும் நபரை எடுத்துச் செல்ல வேண்டாம் என முதலில் எச்சரியுங்கள். மீறினால் ஒன்றில் இருந்து பத்து வரை எண்ணி விட்டு சுட்டு விடுங்கள்.

அத்துடன் உயிர் சேதங்கள் ஏற்படும் படியான சம்பவங்களாக இருந்தால் உடனடியாக சுட வேண்டுமென தெரிவித்துள்ள அவர், வாக்குப் பெட்டிகளை கொள்ளையிடவரும் நபர்களின் தலையில் துப்பாக்கியால் சுடுமாறு என்னால் இம்முறை கூற முடியாது.

தற்போது தேர்தல் ஆணைக்குழுவில் மேலும் இரண்டு பேர் இருப்பதால் அவர்களிடம் கேட்டே துப்பாக்கியால் சுட முடியும்.

கடந்த முறை போல் என்னால் இம்முறை தனியாக தீர்மானங்களை எடுக்க முடியாது. நாங்கள் மூன்று பேர் இருப்பதே இதற்கு காரண என தெரிவித்துள்ளார்.

அத்துடன் மூன்று பேரிடமும் கேட்ட பின்னரே எந்த இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும் எனக் கூற முடியும். இதற்கு பொலிஸாரே நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தாக்கது

Related posts: