வாக்களிப்பு காலத்தில் அரச ஊழியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படகூடாது – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!.

Friday, July 24th, 2020

வாக்களிப்பு காலத்தில் அனைத்து அரச ஊழியர்களும் எந்தவொரு தொழிற்சங்கத்துடனும் நேரடி தொடர்பை கொண்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படகூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அத்துடன் அரசியல் உரிமை இருந்தாலும், இல்லாவிடினும் அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அனைத்து பிரிவினரும் எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தலுடன் தொடர்புடைய வேட்பாளர்கள் ஆயத்தப்படுத்தும் நிகழ்வுகளில் தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்று வருவது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆகவே, அனைத்து அரச ஊழியர்களும் இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றுவதை தவித்து கொள்ள வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தேர்தலை நடத்துவது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் லக்ஸ்மன் கம்லத் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ்.பொதுநூலகத்தில் போக்குவரத்து விதி முறைகள் மற்றும் வீதி விபத்துக்களைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிச...
போதியளவு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
13 ஆவது திருத்தத்தை உரியமுறையில் அமுல்ப்படுத்த வேண்டும் - மார்ச் 12 இயக்கம் வலியுறுத்த முனைந்தது ஒரு...

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் !
அரசியல் பழிவாங்கல் - முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நால்வருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை!
விவசாயிகள் நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டும் - இல்லையேல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அரிசியை இறக...