வாகன உரிமை பெயர் மாற்றம்: சலுகைக் காலம் ஜனவரி.01 வரை நீடிப்பு!
Thursday, December 1st, 2016
வகனங்களின் உரிமையைத் தமது பெயருக்கு மாற்றிக்கொள்ள வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரமொன்றை போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது வாகனங்களின் உரிமையை உறுதி செய்து கொள்ளாது வாகனம் வைத்திருப்பவர்கள் சட்டரீதியாக உரிமையைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் வழங்கியிருந்த சலுகைக்காலத்தை நீடிக்க இணங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நவம்பர் 30ஆம் திகதி இந்த சலுகைக்காலம் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பெரும் எண்ணிக்கையானவர்கள் வாகன உரிமையை பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பதனால் கால அவகாசத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Related posts:
|
|