வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்!
Thursday, January 13th, 2022வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாட்டிற்கு பெருமளவிலான அந்நியச் செலாவணியைத் பெற்றுத்தரக்கூடிய சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் எதிர்வரும் மாதங்களில் ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்துவதன் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம் எனக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர் – ‘வாகனங்கள் மற்றும் ஓடுகள் தவிர அத்தியாவசியமற்ற அனைத்துப் பொருட்களும் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதன் மூலம் பெருமளவிலான அந்நிய செலாவணி நாட்டை விட்டு வெளியேறுகின்றது’ என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உடுவில் மகளிர் கல்லூரி சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விளக்கம் கோரல்!
அலுகோசு பதவிக்கான விண்ணப்பப்படிவங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
160 ரயில் பெட்டிகளில் 103 பயன்பாட்டில் இல்லை - காரணத்தை கண்டறிய "கோபா" குழு பணிப்பு!
|
|