வாகனங்களில் கட்சியை விளம்பரப்படுத்தும் பதாதைகளுக்கு தடை – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, July 10th, 2020

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பயணிக்கும் தனிப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் கட்சியை விளம்பரப்படுத்தும் புகைப்படம், பனர் மற்றும் ஸ்டிக்கர்களை காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தனியார் பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய தனியார் வானங்களில் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் உடனடியாக அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதனிடையே தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணான விதத்தில் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் அல்லது பதாதைகள் ஒட்டப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தேர்தல் சட்டத்தின் படி அவை குற்றச் செயல்கள் என்பதால் உடனடியாக அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணான விதத்தில் தனியார் பேருந்துகள் , முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் குறித்தவொரு வேட்பாளரை அல்லது கட்சியை ஊக்கப்படுத்தும் விதத்திலான வாசகங்கள் , அடையாளங்கள் , புகைப்படங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் அல்லது பதாதைகள் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

வேட்பாளர் பயணம் செய்யும் பிரத்தியேக வாகனம் தவிர்ந்த வேறு வாகனங்களில் மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறான ஸ்டிக்கர்கள் அல்லது பதாதைகளை காட்சிப்படுத்தலானது 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 74 ஆம் பிரிவின் கீழ் குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் பேரூந்து , முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட அனைத்து தனியார் வாகனங்களிலும் ஒட்டப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட வகையிலான ஸ்டிக்கர்களை நீக்குவதற்கு ஒவ்வொரு பொலிஸ் அதிகாரப் பிரதேசத்தையும் உள்ளடக்கும் விதத்தில் திடீர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அந்தந்த பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் பிரிவுகளுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கும் அதன் மூலம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அவசியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் -  யாழ்.இந்தியத் துணைத் தூத...
வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை 29 ஆம் திகதியுடன் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு!
தேசிய ரீதியில் அல்ல சர்வதேச ரீதியிலும் எமது வீரர்கள் விளையாட்டு துறையில் சாதிக்கும் நிலை உருவாகியுள...