வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி கோரிக்கை!

Saturday, July 29th, 2023

அரச அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு அவசியமான வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி குறித்த கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: