வழமைக்கு திரும்பிய பொது போக்குவரத்து -தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
Wednesday, April 24th, 2019வழமையான நேர அட்டவணைக்கு ஏற்ப புகையிரத சேவைகள் இன்றுமுதல் மேற்கொள்ளப்பட உள்ளதுடன், மக்களின் போக்குவரத்து தேவைக்கு ஏற்ப பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புகையிரத சேவைகள் இன்று அதிகாலை நான்கு மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் பாதுகாப்பிற்காக பெருந்திரளான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related posts:
வறுமை ஒழிப்பு ஆண்டாக 2017ஆம் ஆண்டு பிரகடனம்? - ஜனாதிபதி
பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தால், பணியிலிருந்து நீக்கப்படுவர்!
இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை- ம.உ.ஆணைக்குழு விசாரணை முன்னெடுப்பு!
|
|