வருகின்றது புதிய நடைமுறை: மீறினால் கடும் சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சு!

Friday, April 12th, 2019

மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு தரமற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு மோசடியான வர்த்தகத்தில் ஈடுபடுவோரை உடனடியாக பொதுமக்கள் சுகாதார அமைச்சுக்கு அறியத் தர வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்தந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதர்களிடம் இது குறித்து முறைப்பாடு செய்யுமாறு அமைச்சின் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை உணவகங்களில் கையுறை இல்லாமல் உணவுப்பொருட்களை பரிமாறினால் அதனை நிராகரிக்கும் உரிமை நுகர்வோருக்கு உள்ளது.

கையுறை இன்றி உணவுப்பொருட்களை விநியோகிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts:


நீங்கள் அடித்துக்கலைக்க நாங்கள் சாதாரணமானவர்கள் அல்லர் - கஜேந்திரனுக்கு  எச்சரிக்கைவிடும் சிவாஜிலிங்...
நாட்பட்ட நோயாளர்கள் சமூகத்திற்குள் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பா...
கூட்டுறவு சங்கங்கள் கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக்கி சதோசவுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் - வர்த்த...