வருகின்றது அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!

வரும் வாரம்முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படவுள்ளதாக வணிகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியார் துறையினர் அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்காதமையால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தின்போது குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டரிசி ஒரு கிலோ 74 ரூபாவாகவும் சுதேச சம்பா ஒருகிலோ 85 ரூபாவாகவும் அதிகூடிய சில்லைறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வெள்ளையரிசி ஒருகிலோ 65 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் துறையினர் அதனை மீறி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
00
Related posts:
எல்லைதாண்டும் மினவர் பிரச்சினை தொடர்பில் நவம்பர் 5ஆம் திகதி அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தை!
கூட்டமைப்புக்குள் கொந்தளிப்பு : நல்லூர் பின் வீதியில் கொடும்பாவியாக்கப்பட்டார் சுமந்திரன்!
இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும் ஆதரவு தொடரும் - சீன தூதுவர் அறிவிப்பு!
|
|