வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களை தடுப்பதற்கு தோட்டாக்களுடன் கூடிய துப்பாக்கிகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டியேற்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023

வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களை தடுப்பதற்காக தோட்டாக்களுடன் கூடிய துப்பாக்கிகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டியேற்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களால் வருடத்துக்கு 17 முதல் 20 பில்லியன் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.

கடந்த வருடம் வன விலங்குகளால் 200 மில்லியனுக்கும் அதிகமான தேங்காய்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்டகது

Related posts: