வன்முறைகள் குறைவடைய வேண்டுமாகில் தண்டனைகள் அதிகரிக்கப்படல் வேண்டும். – முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!
Saturday, November 26th, 2016
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவடைய வேண்டும் என்றால் வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான தண்னைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி ரூபவதி கேதிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான பணத்தையும் பலத்தையும் சேகரிப்போம்” எனும் தொனிப்பொருளில் உலக் பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான வாரமான நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 வரையான “வெண்பட்டி தின” வாரத்தின் தொடக்க நிகழ்வும் பேரணியும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் நேற்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி ரூபவதி கேதிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Related posts:
விலைக் கட்டுப்பாட்டை மீறிய 180 மருந்தகங்கள் தொடர்பாக முறைப்பாடுகள்!
யாழ்ப்பாணத்தில் பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிராக ஆர்பாட்டம்!
“ஜனாதிபதி விளையாட்டு விருது” நிகழ்வு இன்று!
|
|