வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் அமைச்சர் மஹிந்த அமரவீர!

Thursday, January 19th, 2023

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பதவியை பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அப்பதவிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு, ஜனாதிபதிக்கு வழி வகுக்கும் வகையில் தான் பதவி விலகியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அவர் விவசாயத்துறை அமைச்சராக தொடர்ந்தும் பதவி வகிப்பார்.

இதேவேளை, இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழாவில் உரை நிகழ்த்துகையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.

Related posts:

ஜனவரிமுதல் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான போக்குவரத்து திட்டம் ஆரம்பம் - போக்குவ...
உயிர் மீது ஆசை இருந்தால் வீட்டில் தங்கியிருங்கள் - பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ...
பரவி வரும் இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகள...