வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023

தனது திருமண விருந்துக்கான மின்சாரக் கட்டணத்தில் மில்லியன் கணக்கான ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சாரக் கட்டணம் தொடர்பில் எழுத்துபூர்வமாக விளக்கமளிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபை இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: