வடக்கு மாகாண மட்ட ஆங்கில தினப்போட்டி முடிவுகள்

Sunday, July 15th, 2018

வடக்கு மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் கிளிநொச்சி கல்வி வலயத்தில் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்களும் பாடசாலைகளும் கிளிநொச்சி வலய உதவிக் கல்விப் பணிப்பாளரினால் (ஆங்கிலம் ) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதற்கமைய சொல்வதெழுதல் தரம் – 06 – சிவகுமார் ஆர்வலன் (கிளி. கிளி. ம.வி) முதலாமிடம், கட்டுரை எழுதுதல் – மோகன்தாஸ் புகழினி (கிளி.கிளிநொச்சி ம.வி), நாடகம் – ஆரம்பப் பிரிவு (கிளி.கிளிநொச்சி ம.வி) இரண்டாமிடம், குழு உரையாடல் (கிளி.புனித திரேசா பெண்கள் கல்லூரி) இரண்டாமிடம், உறுப்பெழுத்து – தரம் 10 விஜயகுமார் சபாரிகா (கிளி.கிளிநொச்சி இந்துக் கல்லூரி) மூன்றாமிடம், கவிதை – தரம் 05 – நிசாந்தன் அபிசேகா (கிளி.கிளிநொச்சி ம.வி) முன்றாமிடம், பேச்சு – தரம் 13 ஞானகரன் கிருத்திகா (கிளி.வட்;டக்கச்சி மத்திய கல்லூரி) மூன்றாமிடம்.

Related posts: