வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்!

Wednesday, August 23rd, 2023

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ல்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று பலாலி விமான நிலையம் வழியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அவர், வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ல்ஸ் ஐ சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அத்துடன் வட மாகாணத்தின் மேலும் பல பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: