வடக்கு மாகாணத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் !

Thursday, March 26th, 2020

வடக்கு மாகாணத்துக்கு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள்

உள்ளுர் பலசரக்கு கடைகள் திறக்கலாம் கடையை சுற்றியுள்ள மக்கள் வாகனத்தில் செல்லாமல் ”நடந்து” சென்று வாங்கலாம்.

வெதுப்பங்கள் இயங்கலாம். உற்பத்திகளை வீடுவீடாக வாகனங்களில் கொண்டு சென்று விற்கலாம்

  1. பல்பொருள் அங்காடிகள் திறக்க முடியாது 500 ரூபா 1000 ரூபா பொதிகளாக்கி வீடுவீடாக சென்று விநியோகிக்கலாம்

கடலில் மீன் பிடிக்க அனுமதி. மீன் பிடித்து வீடுவீடாக கொண்டு சென்று விற்கலாம்.மீன்சந்தைகள் கூட முடியாது.

அரிசி உற்பத்திக்காக மட்டும் ஆலைகள் இயங்கலாம்.வெளிமாவட்டத்தில் இருந்து அரிசி விநியோகம் செய்யப்படலாம்

மரக்கறிகளும் ”உள்ளுர் வியாபாரிகளால் கொள்வனவு செய்யப்பட்டு” கொண்டு சென்று விற்கலாம். சந்தைகள் திறக்கப்பட முடியாது.

  1. மருந்தகங்கள் திறக்கலாம் உரிய கிளினிக்கொப்பியுடன் சென்று வாங்கலாம்
  2. நோயாளர்கள் கிளினிக்கொப்பியுடன் அருகில் உள்ள வை்த்திய சாலைக்கு செல்லலாம்

ஐஸ் கட்டி தொழிற்சாலைகள் இயங்கி மீன்பிடிக்கு தேவையானவைற்றை மட்டும் உற்பத்தி செய்யலாம்

அனைத்து நடவடிக்கைகளிலும் நோய் தொற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்

Related posts:

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்பட...
பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அழைப்பு !
மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என போதிக்கும் மத்திய வங்கி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளது -மன்னிப...