வடக்கு கிழக்கிலுள்ள 3000 குடும்பங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வீடுகள் வழங்க திட்டம்!
Monday, August 15th, 2016வடக்கு கிழக்கிலுள்ள 3000 குடும்பங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வீட்டுத் திட்டம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது. இவ்வாறு வழங்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள இந்த வீட்டுத்திட்டங்கள் இந்த வருட இறுதிக்குள் கட்டிமுடிக்கப்படும் என்றும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
Related posts:
தனியார் நிறுவனங்களில் இரத்தப் பரிசோதனை செய்ய தடை!
கொரோனா : பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது!
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று - கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அதிர்ச்சித் தக...
|
|