வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் பலமான மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Friday, April 12th, 2024பலமான மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மேல், தெற்கு, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடிய அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழையின் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை!
“எமது நாடு எமது கைகளில்” பிரதமர் மஹிந்த தலைமையில் நாளை சிறுவர் தின விழா!
இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்காற்றுவதற்கு ஆற்றுவதற்கு, உலக நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் த...
|
|