வடக்குப் பொலிஸாரின் விடுமுறைகள் நிறுத்தம்!

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகள் இன்று தொடக்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசான் ரொசான் பெர்னாண்டோவின் உத்தரவுக்கு அமைவாகவே விடுமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது. என்ன காரணத்துக்காக விடுமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பில் தெரியவரவில்லை.
இதேவேளை வடக்கு மாகாண பொலிஸாரின் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில் அது தற்போது நாளை மறுதினம் 17 ஆம் திகதியும் 19 ஆம் திகதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Related posts:
சகல சமுர்த்தி அதிகாரிகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை!
தவணை பரீட்சை: பாடசாலையில் நடந்தேறிய நெகிழ்ச்சியான சம்பவம்!
வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் கட்டாயமில்லை - சுகாதார பணிப்பாளர் நாயகம...
|
|