சகல சமுர்த்தி அதிகாரிகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை!
Saturday, August 11th, 2018
சகல சமுர்த்தி அதிகாரிகளுக்கும் இவ்வருட இறுதிக்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.ஹரிஸன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்களுக்கு ஓய்வூதியக்கொடுப்பனவு வழங்கப்பட இருக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி அதிகாரிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டாலும் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
தற்சமயம் 27 ஆயிரம் சமுர்த்தி அதிகாரிகளும் நான்காயிரத்திற்கும் அதிகமான சமுர்த்தி முகாமையாளர்களும் உள்ளார்கள். இவ்வருட இறுதிக்குள் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் ஓய்வூதியம் பெறுபவரிடம் இருந்த எந்த வரியும் அறவிடப்படுவதில்லை என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
Related posts:
சிறப்புற நடைபெற்ற வட்டு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல்!
பாதீடு தொடர்பான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று !
20 இலட்சத்து 38 ஆயிரத்து 530 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு - உள்நாட்டு அலுவல்கள...
|
|