வடக்கில் 285 மில்லியன் செலவில் படகு கட்டுமாண தொழிற்சாலை!

காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகுக் கட்டுமானத் தொழிற்சாலை ஒன்றை இலங்கை கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சினால் அமைக்கப்படவுள்ளது.
கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் நாளை இந்த தொழிற்சாலைக் கட்டுமானப் பணி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அனைத்துலக கடற்பரப்பில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான 55 அடி நீளமுள்ள படகுகளைத் தயாரிக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே, காரை நகரில் புதிய படகு கட்டுமான தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது. இலங்கையின் மீன் உற்பத்தியில் வடக்கு மாகாணம் முதன்மையான பங்கை வகித்து வரும் நிலையில், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட திட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
Related posts:
மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது - மஹிந்த தேசப்பிரிய!
அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடும்போது மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவிக்க வேண்டும...
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் - 3000 அரச ஊழியர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு மீளப் பதவியில் அ...
|
|