வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்றுறுதி!
Thursday, May 20th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 840 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 பேருக்கும் கிளிநொச்சியில் 23 பேருக்கும் வவுனியாவில் மூவருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
மழையுடனான காலநிலை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
கிழக்கின் கொவிட் நிலைமைகள் தொடர்பில் விசேட அவதானம் - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!
பொருளாதார மறுமலர்ச்சி, அபிவிருத்திக்கான அமைச்சரவையின் உபகுழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!
|
|
|


