வடக்கில் மாவட்ட அரச அதிபர்கள் மாற்றம்!

Wednesday, July 4th, 2018

மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிபர் பதவிக்கு புதிதாக இருவரை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நியமித்துள்ளது.
இதற்கமைய நிந்தாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய எஸ்.எல்.முகமட் ஹனீபா வவுனியா மாவட்ட அரச அதிபராகவும், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மோகன்ராஜ் மன்னார் மாவட்ட அரச அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை வரலாற்றில் இரண்டாவது முஸ்லிம் அரச அதிபராக ஹனீபா பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: