வடக்கில் நெல் கொள்வனவுக்காக மேலும் 25 மில்லியன் நிதி பகிர்ந்தளிப்பு – வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் தெரிவிப்பு!

Friday, February 11th, 2022

வடக்கு மாகாணத்தில் நெல் கொள்வனவுக்காக இரண்டாம் கட்டமாக 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான நந்தகோபாலன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் நெல் ஆலைகள் ஊடாக போதிய நெல் கொள்வனவு செய்வதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல் அரிசி ஆக்கப்பட்டு ஏனைய கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடமாகாண கூட்டுறவு திணைக்களத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்காக 15 மில்லியன் ரூபா வழங்கப்பட்ட நிலையில் வடக்கு மாகாண நிதியிலிருந்து மேலும் 25 மில்லியன் ரூபாய் இரண்டாம் கட்டமாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு 3 மில்லியன், கராச்சி தெற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு 5 மில்லியன் ரூபா, யாழ் மாவட்டத்தில் கொடிகாமம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் 5 மில்லியன், உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் 2 மில்லியன், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒரு மில்லியன் , துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் 2 மில்லியன்.

மேலும், வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் 3 மில்லியன் , வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கம் 2 மில்லியன் என கூட்டுறவுச் சங்கங்களின் ஆலைகளுக்கு நெல் கொள்வனவுக்காக குறித்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கும் உரிமை உண்டு - யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் வலியுறுத்து!
அரச மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்கள் தங்களது பெயர்களில் அதனை பதிவு செய்வதற்கு சந்தர்ப்...
தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்து!