வடக்கில் நல்லிணக்கம்!

Friday, June 3rd, 2016

வடக்கில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரித்துள்ளார்.

வடக்கில் அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். முன்னைய அரசாங்கமானது நாட்டின் நீதித்துறை உட்பட சகலத்துத்துறைகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.

அதனால் அனைத்துத்துறைகளும் சுயாதீனமாக செயற்படும் உரிமை அற்று காணப்பட்டன. ஆனால் தற்போது சகலதுறைகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாட்டில் காவற்துறை ஆணைக்குழு, பொது நிர்வாக ஆணைக்குழு, நீதி ஆணைக்குழு ஆகிய அனைத்தும் தற்போது சுயமாக செயற்படுகின்றன.

இந்த நடவடிக்கையால் நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதுடன், இத்தகைய நடவடிக்கைகள் ஊடாக வடக்கில் நல்லாட்சியினை நிலைநிறுத்துவதற்காக செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் ரெஜினோல்ட் குரே குறிப்பட்டுள்ளார்.

Related posts: